கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் தனது தந்தை சித்தராமையா முதல்வராக வேண்டும் என அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான யதீந்திரா சித்தராமையா,'காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க எதையும் செய்வோம்.
கர்நாடக மக்கள் நலனுக்காக எனது தந்தை முதல்வராக வேண்டும். ஒரு மகனாக நான் நிச்சயமாக அவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அவரது கடந்த ஆட்சியில் மிகச்சிறந்த ஆட்சி இருந்தது. இந்த முறையும் அவர் முதல்வராக இருந்தால் ஊழல் மற்றும் தவறான ஆட்சியின் போக்கு களையப்படும் என்றார்.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
டிமான்டி காலனி - 3 புதிய அப்டேட்!

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிகார் அமைச்சர்!

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!

கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

