அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில் விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. முன்னதாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் 'பயங்கரவாத அமைப்புகளான பிஎப்ஐ, பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக, விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையும் படிக்க | முதல்வர் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ. அமைப்புடன் பஜ்ரங் தள அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் கார்கே இழப்பீடாக ரூ. 100 கோடி தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
பஞ்சாபின் சங்ரூர் நீதிமன்றம் இந்த வழக்கை இன்று விசாரித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!

திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை(மார்ச் 17) ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெக
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

