பெங்களூரு: கடந்த சில நாட்களாக பெங்களூரு தெருக்களில் சுற்றித் திரிந்த சிறுத்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தேடுதல் நடவடிக்கையின் போது, வன அதிகாரியான டாக்டர் கிரண் மற்றும் மற்றொரு அதிகாரியை சிறுத்தை தாக்கிதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
பெங்களூரு குட்லு கேட் பகுதியில் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த சிறுத்தை பிடிபட்டது.