ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருந்து ஆலையில் விபத்து: 5 பேர் காயம், 10 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

மகாராஷ்டிரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
மகாராஷ்டிரம் மருந்து ஆலையில் வெடி விபத்து
Updated On :3 நவம்பர் 2023, 10:47 am

DIN

மகாராஷ்டிரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

புளூஜெட் ஹெல்த்கேர் லிமிடெட் தொழிற்சாலையில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட போது சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர். 

முதற்கட்ட தகவலின்படி, வாயு கசிவே வெடி விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவியது, சற்று நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மற்ற அலகுகளுக்கும் தீ பரவத் தொடங்கியது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயைக் கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

தொழிற்சாலையில் கருமையான புகை வெளியேறிய நிலையில்,  தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் சிக்கியிருந்த 5 பேரை மீட்டனர். அவர்களில் இருவரின் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மூவர் ஆபத்தான நிலையில் மஹத் கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

மருந்து தொழிற்சாலையில் 10 பேருக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.