சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரள சிறுமி படுகொலை: பிகார் இளைஞர் குற்றவாளி என தீர்ப்பு!

கேரளத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பிகாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என எர்ணாகும் போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. 

News image
Updated On :4 நவம்பர் 2023, 9:33 am

DIN

கேரளத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பிகாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என எர்ணாகும் போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. 

கேரளத்தில் ஆலுவா பகுதியில் வசித்து வந்த பிகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்ற இளைஞன் கடந்த ஜூலை 28ல், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியின் கழுத்து நெறித்து கொலை செய்து உடலை சாக்கு பையில் அடைத்து குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றுள்ளார். 

கேரளத்தில் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிசிடிவி உதவியுடன் ஆலமை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்த்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து 100-வது நாளான இன்று வழக்கு விசாரணை நிறைவு செய்யப்பட்டது. அதன்படி ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை குற்றவாளி என எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் நவம்பர் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.