ஜம்மு-காஷ்மீரின் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் 9 அடி மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒன்பது அடி மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை மூன்று நாட்களுக்கு முன்பு வளாகத்தில் கண்ட பாதுகாவலர், வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த மலைப்பாம்பு நிபுணர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினார். இதைத்தொடர்ந்து மலைப்பாம்பை அருகிலுள்ள அடர்ந்த காட்டில் விட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.