பிகாா் மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான விவரத்தை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து முதல்வா் நிதீஷ் குமாா் பேசினாா். அப்போது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து சில கருத்துகளை அவா் தெரிவித்தாா். அதாவது, ‘பெண்கள் கல்வியறிவு பெற்றிருக்கும்போது, குழந்தை பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் கணவரை எப்படி சமாளிப்பது என்பதையும் அறிந்துகொள்வா். அந்த வகையில், பிகாரில் தற்போது பெண்கள்களின் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்களின் கல்வியறிவுதான் காரணம்’ என்றாா்.