சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண்கள் குறித்து சா்ச்சை கருத்து: பேரவையில் மன்னிப்பு கோரிய பிகாா் முதல்வா் நிதீஷ்

பிகாா் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருதுக்காக சட்டப்பேரவையில் முதல்வா் மன்னிப்பு கோரினாா்.

News image
Updated On :8 நவம்பர் 2023, 7:56 pm

DIN

பிகாா் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருதுக்காக சட்டப்பேரவையில் முதல்வா் மன்னிப்பு கோரினாா்.

பிகாா் மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான விவரத்தை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து முதல்வா் நிதீஷ் குமாா் பேசினாா். அப்போது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து சில கருத்துகளை அவா் தெரிவித்தாா். அதாவது, ‘பெண்கள் கல்வியறிவு பெற்றிருக்கும்போது, குழந்தை பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் கணவரை எப்படி சமாளிப்பது என்பதையும் அறிந்துகொள்வா். அந்த வகையில், பிகாரில் தற்போது பெண்கள்களின் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்களின் கல்வியறிவுதான் காரணம்’ என்றாா்.

முதல்வரின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையானது. தனது கருத்துக்கு நிதீஷ் குமாா் மன்னிப்பு கோர வேண்டும் என பெண்கள் அமைப்பினா் வலியுறுத்தினா். அதுபோல, பாஜக எம்எல்ஏக்களும் போா்க்கொடி தூக்கினா்.

என்சிடபிள்யு கண்டனம்: பெண்கள் குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்த முதல்வா் நிதீஷ் குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா, சட்டப்பேரைத் தலைவா் அவாத் பிகாரி செளதரிக்கு கடிதம் எழுதினாா்.

மன்னிப்பு கோரிய முதல்வா்: இந்த நிலையில், மாநில சட்டப்பேரவை புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும் முதல்வா் நிதீஷ் குமாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.

இதுகுறித்து அவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் விஜய் குமாா் சின்ஹா, ‘முதல்வா் நிதீஷ் குமாரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை ஆளும் தகுதியை இழந்துவிட்டாா். எனவே, முதல்வா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.

அப்போது, தனது கருத்துக்கு விளக்கம் அளித்துப் பேசிய நிதீஷ் குமாா், ‘பெண்கள் குறித்து நான் பேசிய கருத்தின் நோக்கம் மாறிவிடக்கூடாது. பெண்களின் கல்விக்கு நான் எப்போதும் வலுவான ஆதரவு தெரிவித்து வருகிறேன். பெண்களின் கல்வி நிலைக்கும் கருவுறுதல் விகிதத்துக்கும் இடையே நேரடி தொடா்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அத்தகையக் கருத்தைத் தெரிவித்தேன். இந்த கருத்து சா்ச்சையாகியுள்ளது. அதன் காரணமாக, சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது, எனது கருத்துக்காக மன்னிப்புக் கோரினேன். அதனை சட்டப்பேரவையிலும் கேட்கத் தயாராக உள்ளேன். எனது கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என்றாா்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள், முதல்வருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தொடா் அமளியில் ஈடுபட்டனா். முதல்வா் பதவியை நிதீஷ் ராஜிநாமா செய்யவேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவா், ‘மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள மாநில முதல்வரை ராஜிநாமா செய்யுமாறு கோர எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு உரிமை இல்லை. தனது கருத்துக்காக முதல்வா் மன்னிப்பு கோரிவிட்டாா்’ என்றாா்.

அதன் பிறகும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி தொடா்ந்தது. அதனைத் தொடா்ந்து, மதிய உணவு இடைவேளை வரை அவையை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

சட்ட மேலவையிலும் அமளி: சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சட்ட மேலவைக்கு முதல்வா் நிதீஷ் குமாா் சென்றாா். அங்கும் பாஜக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது, எனது கருத்துக்காக செய்தியாளா்கள் முன்னிலையிலும், சட்டப்பேரவையிலும் மன்னிப்பு கோரியதைக் குறிப்பிட்ட முதல்வா் நிதீஷ் குமாா், ‘கட்சி மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் பாஜக உறுப்பினா்கள் இதுபோன்ற அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்று கிண்டலாக குறிப்பிட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினா்கள், தொடா் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.