அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்ற ராஜ்நாத் சிங்!

இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை லாய்ட் ஆஸ்டினை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News image
Updated On :9 நவம்பர் 2023, 4:58 pm IST

'2+2' உரையாடலுக்காக இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ‘2+2’ வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக இந்தியத் தலைநகர் புதுதில்லிக்கு வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமான நிலையத்தில் இன்று (நவம்.9) வரவேற்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர்.

ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் அமெரிக்க அமைச்சர்களுடன் தனித்தனியான இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் வேகமாக விரிவடைந்து வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் பற்றிய விரிவான மதிப்பாய்வை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கடைசியாக 2023 ஜூன் மாதம் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.