வீட்டில் பட்டாசு தயாரித்தபோது உயிரிழந்த தில்லி இளைஞர்!

தில்லியைச் சேர்ந்த வாலிபர், வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது.
மாதிரி படம்
மாதிரி படம்
Published on
Updated on
1 min read

21 வயதான ஹிமான்ஸு என்பவர் தில்லி வெல்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (நவ.10) பிற்பகல் 2.10 மணிக்கு விபத்து குறித்து காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

வீட்டில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் காயமடந்ததாகக் கிடைத்த தகவலையொட்டி அங்கு விரைந்துள்ளனர் தில்லி காவலர்கள்.

ஹிமான்ஸு வீட்டில் பட்டாசுக்கான மருந்து கலவையை உருவாக்க சல்பர் மற்றும் பொட்டாசியம் மருந்துகளை கலந்த போது இந்த வெடி விபத்து நடந்துள்ளது.

அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹிமான்ஸு இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது குறித்து காவலர்கள் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com