மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட 80 இந்திய மீனவர்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்பட்ட 80 மீனவர்கள் 3 வருடங்களுக்குப் பிறகு தாய்நாட்டை வந்தடைந்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :11 நவம்பர் 2023, 12:36 pm

DIN

பாகிஸ்தான் அரசு 80 இந்திய மீனவர்களை விடுதலை செய்து இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தது.

கடந்த வியாழக்கிழமை 80 இந்திய மீனவர்களை கராச்சியிலுள்ள மிலார் சிறையிலிருந்து பாகிஸ்தான் அரசு விடுவித்தது. அந்த 80 மீனவர்களும் அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பஞ்சாப் காவல் அதிகாரி அருண் மஹால் கூறியதாவது, 'அனைத்து விடுவிக்கப்பட்ட கைதிகளும் வெள்ளிக்கிழமை இரவில் அட்டார்-வாகா எல்லைக்கு தரைவழியாகக் கொண்டுவரப்பட்டனர். இந்திய உயர் ஆணையத்தின் அவசரகால போக்குவரத்துச் சான்றிதழ் மூலம் தரைவழிப் போக்குவரத்துக்கு நடைபெற்றது.  

இந்திய மருத்துவக் குழுவின் மூலம் திரும்பி வந்த மீனவர்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என அருண் மஹால் தெரிவித்தார். 

மேலும், இந்த மீனவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் அரேபியக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தவறுதலாக நுழைந்ததால் பிடிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார். 

மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததும் குனிந்து நிலத்தைத் தொட்டு தங்கள் மரியாதையயையும் அன்பையும் வெளிப்படுத்தினர். 

மேலும், இதுபோன்ற மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு, அரேபியக் கடலில் இந்திய, பாகிஸ்தான் எல்லைகள் சரிவர வரையறுக்கப்படாததே காரணமாகச் சொல்லப்படுகின்றன. மீனவர்களிடம் எல்லைக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்வதற்கு தகுந்த தொழில்நுட்பக்கருவிகள் இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.