ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் - தடுப்பு நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்பு படையினர்!

டிரோன் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலத்தின் பரோபல் கிராமத்தில், குவாட்காப்டர் ட்ரோன் ஒன்று இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அது சைனாவில் தயாரிக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பஞ்சாப் காவல்துறையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் பரோபல் கிராமத்தின் விளைச்சல் நிலங்களுக்கு அருகே டிரோன் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட குவாட்காப்டர் , மாடல் டிஜேஐ மாவிக்-3 கிளாசிக் ரக டிரோன் எனவும் இது சைனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் எனவும் எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது.

மேலும், டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தும் கும்பலின் மற்றுமொரு திட்டம் எல்லைப் பாதுகாப்புப் படையால் தோற்கடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையானது 3,323 கிலோமீட்டர் தொலைவுகொண்ட இந்திய-பாகிஸ்தான் எல்லைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கிறது.

இதே நாளில் மற்றொரு டிரோன், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் மற்றொரு கூட்டுக்  குழுவால் நெஸ்டா கிராமப் பகுதியில் மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com