லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து ‘பல் இல்லாத புலி’யாக மாறிவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா நாளை முன்னிட்டு புதன்கிழமை கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியதாவது: “அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு அவர்களின் பணிகளை சுதந்திரமாக செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவது அவசியம். புதிதாகக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள் அல்லது சட்டத்திருத்தங்களின் மூலம் இந்த மகத்தான நிறுவனங்களை வலுவிழக்கச் செய்து ‘பல் இல்லாத புலி’யாக மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் இந்த நிறுவனங்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவை போதிய பலத்துடன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தின் 14-வது பிரிவு மிகவும் சிறந்தது என்று கூறிய அவர், “ஒரு புகார் மீதான விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக லோக் ஆயுக்தா கருதினால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் அவர் வகித்த பதவியில் தொடரக்கூடாது என அறிவிக்க அதிகாரம் படைத்தது.” என்று பேசினார்.
இதையும் படிக்க: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கடன் வசூல் முகவர்கள் இருவர் கைது
கேரள லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்த கேரள அரசின் முடிவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் கேரள மாநில சட்டப்பேரவையால் திருத்தப்பட்ட அம்சங்களில் பிரிவு 14 உள்ளது. இந்த மசோதா தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.
இருப்பினும், இந்த குறிப்பிட்ட திருத்தம் குறித்து நீதிபதி நாகரத்னா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போதும், ஊழலில் ஈடுபடும்போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


