சிம்லா மற்றும் அமிர்தசரஸ் இடையே தினசரி விமான சேவையை சிம்லா எம்.பி.யும், ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவருமான சுரேஷ் காஷ்யப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் சிம்லாவில் கூறியதாவது, இந்தச் சேவை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதோடு, மாநிலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாநில தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள ஜுப்பல் ஹட்டி விமான நிலையமும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.
இதையும் படிக்க- மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப்பதிவு
ஏர்லைன்ஸ் டைனமிக் கட்டணத்தின் படி, சில இருக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் நல்ல கட்டணத்தை வழங்குகின்றன, ஆனால் கடைசி இருக்கைகள் விலை உயர்ந்தவை, இது தொடர்பாக எங்கள் ஆலோசனைகளையும் மத்திய அரசிற்கு அனுப்புவோம்.
மேலும் இந்த டிக்கெட்டுகளின் விலையை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.