வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆந்திரம்: உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் விலங்கு பராமரிப்பாளர் பலி

ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார். 

News image

கோப்புப் படம்.

Updated On :27 நவம்பர் 2023, 4:42 pm

ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார். 

ஆந்திர மாநிலம்,  விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு விலங்கு பராமரிப்பாளராக நாகேஷ் பாபு(23) பணிபுரிந்து வந்தார். இன்று இவரை பூங்காவில் இமாலய வகை கறுப்புக் கரடி தாக்கியது. இதில் அவர் பலியானார்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது, நாகேஷ், விலங்குகள் இரவில் தங்கும் வீட்டில் அனைத்து கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு உள்ளே சென்று தூய்மை செய்துள்ளார். 

அப்போது அந்த வீட்டிற்குள் வந்த கரடி பாதுகாவலரை தாக்கியது. இதில் அவர் இடது கை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார் என்றார். பாபுவின் குடும்பத்திற்கு வனத்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தனர். 

தாக்குதலைத் தொடர்ந்து, கரடியை பூங்கா அதிகாரிகள் தேனைப் பயன்படுத்தி மீண்டும் அதன் கூண்டிற்குள் அடைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.