இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தற்காலிக தடை!

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:08 am

DIN

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று நிதியுதவி வரவு வைக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஹரிஸ் ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பயிர் நிதியுதவி திட்டத்துக்கு அளித்த அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.