
மும்பை, செம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகிலிருந்த 4 முதல் 5 இரண்டுமாடிக் கட்டமைப்புகள் இடிந்துள்ளதாக குடிமைப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 7.50 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்புப்படையினர், காவல்துறையினர், குடிமைப்பணி அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிக்க: சென்னை ரயில் பயணிகள் 80 பேருக்கு உடல்நிலை பாதிப்பு! காரணம்?
விபத்தில் சிக்கிய 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக குடிமைப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்குபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.