ஆந்திரம், தெலங்கானத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிய வழக்குரைஞர்கள் தொடர்பாக என்ஐஏ.க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, குண்டூர், நெல்லூர் , கடப்பா, திருப்பதி, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com