ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே: மத்திய அரசு

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே: மத்திய அரசு

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.


புது தில்லி: ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில், இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி - இறக்குமதி, விற்பனை, விநியோகம், இருப்பில் வைத்திருப்பது, இ-சிகரெட் குறித்து விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது ஆனால், அதில் இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை.

இ-சிகரெட் தடை சட்டத்தையும் மீறி, மக்களிடையே அதிக அளவில் புழங்குவதாக வந்த குற்றச்சாட்டைத் தொட்ர்ந்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. மேலும் அந்த சிகரெட் விற்பனையில் ஈடுபடும் 15 இணையதளங்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.

இதற்கிடையே, இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்துக்கு எதிரானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு உறுதிபடத்தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இ-சிகரெட் வைத்திருப்பவர்கள் குறித்து புகார் அளிக்க மத்திய அரசு தனியாக இணையதளம் ஒன்றையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com