25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே: மத்திய அரசு

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:34 am IST


புது தில்லி: ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில், இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி - இறக்குமதி, விற்பனை, விநியோகம், இருப்பில் வைத்திருப்பது, இ-சிகரெட் குறித்து விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது ஆனால், அதில் இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை.

இ-சிகரெட் தடை சட்டத்தையும் மீறி, மக்களிடையே அதிக அளவில் புழங்குவதாக வந்த குற்றச்சாட்டைத் தொட்ர்ந்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. மேலும் அந்த சிகரெட் விற்பனையில் ஈடுபடும் 15 இணையதளங்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.

இதற்கிடையே, இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்துக்கு எதிரானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு உறுதிபடத்தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இ-சிகரெட் வைத்திருப்பவர்கள் குறித்து புகார் அளிக்க மத்திய அரசு தனியாக இணையதளம் ஒன்றையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.