ஒடிசாவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து: மாணவர் பலி!
ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கான்கிரீட் துண்டு விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பலியானர்.


ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கான்கிரீட் துண்டு விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பலியானர்.
துசூரி காவல் நிலையப் பகுதியில் உள்ள உச்படா தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆஷித் நாயக்(6) வழக்கம்போல பள்ளிக்கு வந்திருந்தான். மாணவர் மீது பள்ளி மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தான்.
காயமடைந்த மாணவனை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக பத்ரக் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவன், கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...