மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்

பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத் திட்டங்களின் தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளை பாஜக அரசு இடமாற்றம் செய்தது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

News image
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)
Updated On :11 அக்டோபர் 2023, 8:22 am

DIN

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) அதிகாரிகளை மிரட்டும் வகையிலேயே இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகளை மிரட்டும் வகையில் இடமாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்ட காங்கிரஸ் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

“மோடி அரசை அம்பலப்படுத்தும் எவரையும் மிரட்டி அச்சுறுத்துதல் அல்லது அவர்களை பதவியில் இருந்தே நீக்குதல் என்பதே பாஜகவின் தொடர் செயல்முறையாக உள்ளது. சிஏஜி அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, துவாரகா விரைவுச் சாலை, பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் தொடர்பான மெகா ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாஜக அரசின் ஊழல்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை அச்சுறுத்தும் மாபியா போல மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கான சமீபத்திய எடுத்துக்காட்டு 3 தணிக்கை அதிகாரிகளின் இடமாற்றம். 

இதையும் படிக்க: உருக்குலையும் காஸா!

உள்கட்டமைப்பு மற்றும் சமூகநலத் திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழல்களை சிஏஜி அறிக்கை வெளிப்படுத்தியது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரே கைபேசி எண்ணில் 5 லட்சம் பயனாளிகளின் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் தவறான ஏல நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன. 

இந்தத் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாஜக அரசின் அப்பட்டமான ஊழலை மறைப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.