பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, ஆம் ஆத்மி கட்சியினர் டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர், ஆனால் காவல்துறையும், துணை ராணுவ வீரர்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை பகலில் பட்டியலிட தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணங்கள் அவரின் வழக்குரைஞருக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.