47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் நாளை பேரணி: பிரியங்கா உரை!

ராஜஸ்தான் மாநிலத்தில் அக்.20(நாளை)நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். 

News image
Updated On :19 அக்டோபர் 2023, 9:24 am

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் அக்.20(நாளை)நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். 

5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், மிசோரம், தெலங்கானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பேரணியில் நாளை ஈடுபட உள்ளார். 

இந்த தேர்தலில் பேரணியில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் குறித்து கட்சியின் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் பேரணியில் பிரியங்கா காந்தி உரையாற்றுவார் என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஏஐசிசி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, முதல்வர் அசோக் கெலாட், பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.