ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜம்முவில் சிக்கித்தவித்த 2 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிந்தன் பகுதியில் சிக்கித் தவித்த 2 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 6:40 am

DIN

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிந்தன் பகுதியில் சிக்கித் தவித்த 2 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அனந்த்நாக்கில் இருந்து கிஷ்த்வார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த சிந்தன் பகுதியில் சிக்கித் தவிப்பதாக போலீஸாருக்கு அழைப்பு வந்தது.

அதன்பிறகு, மூத்த காவல் கண்காணிப்பாளர் கலீல் போஸ்வால் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளாக பியூஷ் விஜ் மற்றும் முகமது ஷரீப் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக எங்களுக்கு உதவிய போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொலைதூர அல்லது உயரமான பகுதிகளுக்குப் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாகக் கணிக்கமுடியாத காலநிலையைக் கருத்தில்கொண்டு சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.