மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலின்போது விவிபாட் ரசீதுகள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்பு அவை வேறொரு பெட்டியில் சேகரிக்கப்படவேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “எங்களுக்கு ஒரு கோரிக்கை உள்ளது. விவிபாட் ரசீதினை வாக்காளர்களிடம் தனியாக கொடுத்து விடுங்கள். பின்பு அதனை வேறொரு பெட்டியில் சேகரித்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: கௌதமி விலகல் மனவேதனை அளிக்கிறது: பாஜக தேசிய மகளிரணி தலைவி!
வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, அச்சீட்டுகளை சேகரித்து வைத்திருக்கும் ஏதாவது 10 பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகளை எண்ணி, அதனை வாக்குப்பதிவு எண்ணிக்கையுடன் சரிபார்க்கவும். இரண்டின் முடிவுகளும் சரியாக இருந்தால் பின்பு தேர்தல் முடிவுகளை வெளியிடவும்.
இதனைச் செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்சினை? உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது விவிபாட் இயந்திரத்தில் ஒரே கட்சியின் சின்னம் பதிவானது குறித்த செய்தியையும் திக்விஜய் சிங் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

