மத்தியமேற்கு வங்கக்கடல் உருவான தீவிர புயலான‘ஹாமூன்’ புயலாக வலுவிழந்து புதன்கிழமை(அக்.25) வங்கதேசம் அருகே கரையை கடந்தது. அடுத்த ஆறு மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை காலை உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை ‘ஹாமூன்’ புயலாக வலுப்பெற்றது. இது செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக வடமேற்குவங்கக்கடல்பகுதிகளில் நிலவியது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவியது. இந்த புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே புதன்கிழமை(அக்.25) மாலை கடக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே 40 கி.மீ. தொலைவில் 5.30 மணி நேரமாக மையம் கொண்டிருந்த 'ஹமூன்' புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது மற்றும் அடுத்த ஆறு மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புதன்கிழமை மாலை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க | தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்
மேலும், மிசோரமில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழையுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வியாழக்கிழமை மிசோரம் மற்றும் திரிபுராவில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் கிழக்கு அருணாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் உருவாகும் ‘ஹாமூன்’ புயல் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்கிழமை2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த தீவிர புயலுக்கு ஈரான் ‘ஹாமூன்’ என பெயரிட்டுள்ளது. 'ஹமூன்' என்பது பாரசீக வார்த்தையாகும், இது உள்நாட்டு பாலைவன ஏரிகள் அல்லது சதுப்பு நிலங்களைக் குறிக்கிறது. ஹெல்மண்ட் படுகையையொட்டிய பகுதிகளில் இயற்கையான பருவகால நீர்த்தேக்கங்களாக அவை உருவாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


