ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் தற்போது மாநில வனத்துறை அமைச்சராக இருக்கும் மல்லாக்கிற்குச் சொந்தமான இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மல்லிக்கின் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் ஒருவரை மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.