மகாராஷ்டிரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 22 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இன்று காலை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிந்ததில் 5 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 22 பேர் காயம்!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இன்று காலை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிந்ததில் 5 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர். 

மும்பையிலிருந்து பீட் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆஷ்தா ஃபதா என்ற இடத்தில் அதிகாலை 5.45 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

பேருந்து வேகமாகச் சென்றதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பலியான 5 பேரில் 4 பேர் பீட் மாவட்டத்தில் வசிப்பவர்கள், ஒருவர் யவத்மாலை சேர்ந்தவர் என்று அஷ்தி காவல் நிலைய பொறுப்பாளர் சந்தோஷ் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com