நடிகை ஷ்ருதி ஹாசன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணையும் படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர்கள் கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதன் அறிவிப்பு புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் அனிருத்தின் பின்னணி இசை டிரெண்டிங் ஆனது.
மேலும், இப்படத்தை முழுமையாக பிலிம் கேமராவில் படமாக்க இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் படத்தை 2027 தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகை ஷ்ருதி ஹாசன், “இயக்குநர் நெல்சன் இந்தப் படத்தில் என்ன செய்யப் போகிறார் என பெரிதும் ஆவலாக இருக்கிறேன். நான் இப்படத்தில் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். கூலி திரைப்படத்திற்குப் பின் நான் ரஜினி சாரின் ரசிகையாகி விட்டேன். இவர்கள் இணையும் இந்தப்படம் திரைத்துறையின் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்” எனக் கூறினார்.
Actress Shruti Haasan has spoken about the film that will bring together actors Rajinikanth and Kamal Haasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










