மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைப்பேசி பறிப்பின் போது பலியான பிடெக் மாணவி: குற்றவாளி சுட்டுக்கொலை

கைப்பேசி பறிப்பு சம்பவத்தின் போது 19 வயது பிடெக் மாணவி பலியான நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

News image
கோப்புப் படம்
Updated On :30 அக்டோபர் 2023, 12:38 pm

DIN


காஸியாபாத்: கைப்பேசி பறிப்பு சம்பவத்தின் போது 19 வயது பிடெக் மாணவி பலியான நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

வெள்ளிக்கிழமை, கைப்பேசி பறித்தபோது, ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பிடெக் மாணவி பலியான நிலையில், திங்கள்கிழமை காலை, குற்றவாளியை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர்.

குற்றவாளியை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குக் காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் குற்றவாளி பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கீர்த்தி சிங் என்ற பிடெக் மாணவி, தனது தோழிகளுடன் கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, குற்றவாளி ஜீதேந்திரா, கைப்பேசியை பிடுங்கும்போது, கீர்த்தி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி கீர்த்தி பலியானதால், காவல்துறையினர் ஜீதேந்திராவை தேடிவந்தனர்.

திங்கள்கிழமை காலை, காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் சென்றுகொண்டிருந்த ஜீதேந்திராவை  காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ஜீதேந்திராவை காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

வழிப்பறிப்பு, கொள்ளை என ஜீதேந்திரா மீது 12 வழக்குகள் இருந்ததும், அவர் 2020 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.