
கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
கேரளாவில் மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 3 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உள்பட பல புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். ‘டிபன் பாக்ஸ்’ வழியாக இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (அக்டோபர் 30) ஆய்வு செய்தார். முன்னதாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.