மும்பையில் இந்தியா கூட்டணி 2-வது நாளாக ஆலோசனை!

மும்பையில் இந்தியா கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
மும்பையில் இந்தியா கூட்டணி 2-வது நாளாக ஆலோசனை!

மும்பையில் இந்தியா கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 28 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.

தொடர்ந்து கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் நேற்று(வியாழக்கிழமை) மாலை தொடங்கியது. காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிா்க்கட்சிகள் இதில் கலந்துகொண்டுள்ளன. 

தொடர்ந்து இன்று காலை 11.50 மணியளவில் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணியின் லோகோ இன்று வெளியிடப்படுகிறது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படுகிறார், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் நியமனம், கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கு எப்போது? உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள்

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட 28 கட்சிகளைச் சோ்ந்த 63 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com