மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று (செப்டம்பர் 2) 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மை சிறப்பு நிவாரணக் குழுத் தலைவர் கூறியதாவது: அங்குல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போலங்கிர் மாவட்டத்தில் 2 பேர், ஜகத்சிங்பூரில் ஒருவர், கோர்தா மாவட்டத்தில் 4 பேர் என மொத்தமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்தா மாவட்டத்தில் 3 பேர் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்துள்ளனர் என்றார்.