ஒடிசா: மின்னல் பாய்ந்ததில் 10 பேர் பலி; 3 பேர் காயம்!

மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவின் 6  மாவட்டங்களில் நேற்று (செப்டம்பர் 2) 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா: மின்னல் பாய்ந்ததில் 10 பேர் பலி; 3 பேர் காயம்!

மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவின் 6  மாவட்டங்களில் நேற்று (செப்டம்பர் 2) 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மை சிறப்பு நிவாரணக் குழுத் தலைவர் கூறியதாவது: அங்குல் மாவட்டத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். போலங்கிர் மாவட்டத்தில் 2 பேர், ஜகத்சிங்பூரில் ஒருவர், கோர்தா மாவட்டத்தில் 4 பேர் என மொத்தமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்தா மாவட்டத்தில் 3  பேர் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com