மாநிலத்தில் நல்ல மழை வேண்டி உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வழிபாடு மேற்கொண்டார்.
மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி மகாருத்ர பூஜை நடத்தப்பட்டதாகவும், கோயிலில் சுமார் 66 அர்ச்சகர்கள் இணைந்து மந்திர உச்சாடனங்களை ஜெபித்ததாகவும் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராம் பூஜாரி கூறினார்.
முதல்வர் சௌஹான் மாகாகாளேஷ்வரரின் கருவறையில் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பூஜைகளில் பங்கேற்றார். சிவபெருமானை வழிப்பட்ட பிறகு முதல்வர் சௌஹான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாநிலத்தில் மழை குறைவாக பெய்து வருவதால், வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மகாகாளேஷ்வரரை மனதார வழிபட்டேன்.
எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்தந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் என்ன பாரம்பரியம் இருந்தாலும், தங்கள் மரபுகளைப் பின்பற்றி மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேலும், மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகின்றது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் தேவையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.