தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

மழை வேண்டி மகாகாளேஷ்வர் கோயிலில் முதல்வர் சௌகான் வழிபாடு! 

மாநிலத்தில் நல்ல மழை வேண்டி உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 1:55 pm IST

மாநிலத்தில் நல்ல மழை வேண்டி உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வழிபாடு மேற்கொண்டார். 

மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி மகாருத்ர பூஜை நடத்தப்பட்டதாகவும், கோயிலில் சுமார் 66 அர்ச்சகர்கள் இணைந்து மந்திர உச்சாடனங்களை ஜெபித்ததாகவும் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராம் பூஜாரி கூறினார். 

முதல்வர் சௌஹான் மாகாகாளேஷ்வரரின் கருவறையில் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பூஜைகளில் பங்கேற்றார். சிவபெருமானை வழிப்பட்ட பிறகு முதல்வர் சௌஹான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

மாநிலத்தில் மழை குறைவாக பெய்து வருவதால், வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மகாகாளேஷ்வரரை மனதார வழிபட்டேன். 

எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

அந்தந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் என்ன பாரம்பரியம் இருந்தாலும், தங்கள் மரபுகளைப் பின்பற்றி மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும், மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகின்றது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் தேவையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.