6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா கூட்டணியின் பெயரை பாரதம் என மாற்றினால்...? - பாஜக அரசுக்கு கேஜரிவால் கேள்வி

இந்தியா கூட்டணியின் பெயரை 'பாரதம்' என்று மாற்றினால் மத்திய அரசு அந்த பெயரையும் மாற்றுமா? என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 10:11 am

DIN

இந்தியா கூட்டணியின் பெயரை 'பாரதம்' என்று மாற்றினால் மத்திய அரசு அந்த பெயரையும் மாற்றுமா? என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாடையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள விருந்தினர் அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது. 

இந்தியா என்ற பெயர் 'பாரதம்' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், 'பாரதம் என பெயர் மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஏன் இப்படி நடக்கிறது? எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. கூட்டணியின் பெயரை 'பாரதம்' என்று மாற்றினால் மத்திய அரசு அந்த பெயரையும் மாற்றுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அதாவது 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியதால் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

இந்தியா கூட்டணியால் பாஜக மிகவும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதிலிருந்து மக்களை திசைதிருப்பவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை முன்மொழிந்துள்ளது என்றும் கூறினார். 

மேலும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 'சனாதனம்' குறித்த பேச்சுக்கு 'சனாதன தர்மத்தில் இருந்துதான் நானும் வந்தேன். பலரும் அதைச் சேர்ந்தவர்கள். அனைத்து மதங்களுக்கும் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.