பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
தில்லியில் புதன்கிழமை நடைபெறும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.
5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களிலும், மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டும் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளை பெறுவதற்காக விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.