இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரர் வீர மரணம்!
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ரஜோரியின் நர்லா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ரவி குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்துள்ளார். மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படவில்லை. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.