ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. எக்ஸ்பிரஸ்வே சாலையில் பதிவான சிசிடிவி காட்சி

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 12:30 pm

DIN


காஸியாபாத்: தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையில், தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்தில் பயணம் செய்த 50 பேரில், 20 பயணிகள் எலும்பு முறிவு உள்பட படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மக்களால் மீட்கப்பட்ட பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, நேற்று மாலை 5 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 25 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சியில், பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இடதுபக்கமாக சாலையை குறுக்காகக் கடக்கிறது.  பின்னால் வரும் வாகனங்களை எல்லாம் கடந்து, சாலையின் தடுப்பை உடைத்துக்கொண்டு, சாலைக்கு அப்பால் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விழுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் பயணிகளை மீட்டனர். அதற்குள், அவ்வழியாகச் சென்ற பயணிகளே பலரையும் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.