சிறையில் சந்திரபாபு நாயுடு உயிரைப் பறிக்க சதித்திட்டம்: மகன் குற்றச்சாட்டு

‘ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்துள்ளாா்
சிறையில் சந்திரபாபு நாயுடு உயிரைப் பறிக்க சதித்திட்டம்: மகன் குற்றச்சாட்டு

‘ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்துள்ளாா்; இச்சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவையும் அதே கதிக்கு உள்ளாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது’ என்று அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலருமான நாரா லோகேஷ் வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அவரது மகன் நாரா லோகேஷ் எக்ஸ் (ட்விட்டா்) வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் வீர வெங்கட சத்யநாராயணா என்ற விசாரணைக் கைதி, டெங்கு பாதிப்பால் உயிரிழந்தாா். இதே கதியை, சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

எனது தந்தை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஏதேனும் நோ்ந்தால், முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியே பொறுப்பு. சிறைப் பகுதி முழுவதும் கொசுக்கள் மொய்க்கின்றன. அதிகாரிகள் இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளனா் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com