விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் ஒரு மாத பயணத்துக்கு பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
தொடர்ந்து, லேண்டருடன் பெங்களூரு இஸ்ரோ கட்டளை மையத்துக்கு தொடர்பு உருவாக்கப்பட்டதை அடுத்து, நிலவின் மேற்பரப்பின் புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்தது.
இந்நிலையில், லேண்டரில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
அடுத்த 14 நாள்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.
முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, உலக நாடுகள் அறியாத பல ரகசியங்களை வரும் நாள்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சமரசத்தின் விலை உயிர்களா?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


