நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலைவிழா தொடக்கம்

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 டிசம்பர் 2023, 11:15 am IST

13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா ஒடிசாவில் தொடங்கியது.

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மணல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், கலாச்சாரம் முதல் சமூக பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்த விழா நடைபெறுகிறது.

கடற்கரையின் மணலைப் பயன்படுத்தி சிக்கலான வடிவமைப்பில் பல்வேறு சிற்பங்களை கலைஞர்கள் உருவாக்குகின்றனர். அவை பெரும்பாலும் செய்திகளை வெளிப்படுத்தும் சிற்பங்களாகவே இருக்கின்றன.

இந்த விழாவானது சர்வதேச மணல் சிற்ப கலைஞர்களை கொண்டாடுவது மட்டுமல்லாமல் உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறது.

சுற்றுலாவை மேம்படுத்துதல், மணல் சிற்பத்தின் செழுமையான கலைத்திறனைக் கொண்டாடுதல் மற்றும் கலைஞர்களுக்கு யோசனைகள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சர்வதேச மணல் கலை விழா 2023 இல் பங்கேற்கிறார்கள்.

2011ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் புரியில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் முதல் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கப்பட்டது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.