டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக எம்.பி.யின் பேச்சை இந்தியா கூட்டணியினர் ஏற்கின்றனரா?: பியூஷ் கோயல் கேள்வி

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் பேச்சை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஏற்கின்றனரா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:22 pm

DIN

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் பேச்சை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஏற்கின்றனரா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

அந்தவகையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில் குமார் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசியபோது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து "எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்தார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (டிச.6) பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியாவை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரிக்காதீர்கள். பிரதமர் மோடி மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் நாட்டை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றன. அவர்களில் சிலர் வட இந்தியா, தென்னிந்தியா என்று பேசுகின்றனர். இவ்வாறு நாட்டைப் பிரித்துப் பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “பாஜக வென்ற இந்தி மாநிலங்களைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. செந்தில் குமார் பேசியதை இந்தியா கூட்டணியினர் ஏற்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.