மும்பையில் உள்ள லோக்மன்யா திலக் நகராட்சி மருத்துவமனையில் கழிவறைக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ஒருவரால் கழிவரையின் குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பணியிலிருந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு குழந்தையின் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டப்பிரிவு 317-ன் கீழ் கண்டுபிடிக்கப்படாத பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.