இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு இருப்பது, கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்து, கையிருப்பு குறைந்து வருவதாலும் விலை உயா்வு முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் ரேஷன் முறையில் அவற்றை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக அனைத்து புதன்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

