கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை 25% உயா்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு இருப்பது, கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்து, கையிருப்பு குறைந்து வருவதாலும் விலை உயா்வு முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் ரேஷன் முறையில் அவற்றை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக அனைத்து புதன்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.