சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் பாஜக 54 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 35 இடங்களில் வெற்றியடைந்த காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வரை ஆளும்கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக பணியாற்றியுள்ளார். மோடியின் மத்திய அமைச்சரவையில் சுரங்கத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


