நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மீறி நாடாளுமன்ற மக்களவைக்குள் இன்று பிற்பகல் இருவர் நுழைந்து புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதையும் படிக்க | பாதுகாப்பு வளையத்தில் நாடாளுமன்றம்! மக்களவை ஒத்திவைப்பு!!
இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவைக்கு வெளியே கோஷமிட்ட இரு பெண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்...
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து, பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மேலும், இன்றைய சம்பவம் குறித்து பேச, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | பாஜக எம்பி பரிந்துரையில் வந்தவர்கள்!