பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விஜய் திவஸ்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

விஜய் திவஸ் தினத்தையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 9:56 am IST

விஜய் திவஸ் தினத்தையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்தியா விடுதலை பெற்று தந்தது.

இந்நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி ஆர். ஹரி குமார், இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.