
இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தார். இதையடுத்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(சனிக்கிழமை) அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சேர்ந்து ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை வரவேற்றனர்.
சுல்தானுடன் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உடன் வந்துள்ளனர். ஹைதம் பின் தாரிக் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.
தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சுல்தானுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.
முன்னதாக கடந்த 2018ல் பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.