நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி 

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜகவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். 

News image

கோப்புப்படம்

Updated On :24 டிசம்பர் 2023, 1:18 pm IST


ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜகவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை இருந்து வருகிறது. 2022 - 2023ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வயதினருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம்  10 சதவீதமாக உள்ளது.

இந்த எண்ணிக்கை கிராமப்புறத்தில் 8.3 சதவீதமாகவும், நகர்ப்பகுதிகளில் 13.8 சதவீதமாகவும் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜக வாக்குறுதி என்ன ஆயிற்று” என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு, பல கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.