தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 டிசம்பர் 2023, 12:46 pm

DIN

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறிய கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, “எங்களது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைப் போன்றே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட கட்சியாகும். அந்தக் கட்சியில் உள்ள ஒரு தலைவர் இதுபோன்று பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

திமுக எம்.பி. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்தியிருந்தாலோ அல்லது சில சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டு துன்பப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தாலோ, அது சரியானதாக இருந்திருக்கும்.

ஆனால் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கேலி செய்யும் விதத்தில் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக தயாநிதி மாறன், ”பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஹிந்தி மட்டுமே தெரிந்த மக்கள் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு வந்து கழிவறை சுத்தம் செய்தல், சாலை போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களைப் போலல்லாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. துறைக்கு வேலைக்குச் செல்கின்றனர்.” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.