மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தெருநாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி!

தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2023, 11:21 am

தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்துவந்துள்ளனர். கடந்த டிச.8-ஆம் தேதி தேதி அவர்களது குடிசையினுள் தொட்டிலில் குழந்தையை தூங்கவைத்து விட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். 

அப்போது குடிசையின் அருகே மூன்று தெருநாய்கள் வந்துள்ளன. அதில் ஒரு நாய் குடிசையின் உள்ளே சென்று குழந்தையின் முகம் மற்றும் நெற்றியில் கடித்துள்ளது. அதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. 

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 20 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்திற்கும் ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாய்கள் அனைத்தும் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அம்பர்பேட் பகுதியிலும் நான்கு வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.